பாஜக வாக்குகளை பெற மதத்தை பயன்படுத்துவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆளுங் கட்சியினர் வாக்குகளை பெறுவதற்காக மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் கொள்கைகள் அடிப்படையில் நிறுவப்பட்டதாகவும், தங்களின் அரசியல் அடித்தளம் மகாத்மாக காந்தியால் அமைக்கப்பட்டது எனவும் கூறினார். மேலும் இந்து மதம் தான் உண்மை என்று கூறிய பிரியங்கா, அப்படியானால் உண்மையே வெல்லும் என தெரிவித்தார்.

Night
Day