பாஜக ஆளும் அசாம், உத்தரபிரதேச மாநிலங்களில் அரசியல் சாசனம் படுகொலை செய்யப்படுகிறது - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக ஆளும் அஸ்ஸாம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீண்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில், கவுகாத்தியில் மிருதுல் இஸ்லாம் மற்றும் லக்னோவில் பிரபாத் பாண்டே ஆகிய இரு காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பாஜக ஆளும் அஸ்ஸாம் மற்றும் உத்தரபிரதேசத்தில், மீண்டும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் கொலையான நபர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள அவர், இந்த குடும்பங்களுக்கு முழு நீதி கிடைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

varient
Night
Day