பஞ்சாப் : 13 தொகுதிகளில் ஆம் ஆத்மி தனித்து போட்டி - முதலமைச்சர் பகவாந்த் மான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மம்தா பானர்ஜியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து தான்போட்டியிடும் என அந்த மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பல எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தனித்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் அந்த மாநில முதலமைச்சருமாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, இதேபோன்ற கருத்தை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானும் தெரிவித்தார். பஞ்சாப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இதனால் இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day