நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

21 மாநிலங்களுக்குட்பட்ட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் 39 தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதி, மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள் என முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அருணாசலப்பிரதேசத்திற்கும் 32 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சிக்கிமிற்கும் மக்களவைத் தேர்தலுடன் நாளை சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.   இதையடுத்து தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

varient
Night
Day