துபாய் இளவரசரின் வருகை இருதரப்பு உறவை வலுப்படுத்தும் - பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாய் இளவரசருடனான சந்திப்பால் மகிழ்ச்சியடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முஹமது பின் ரஷீத் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் துபாய் இளவரசின் இந்த சிறப்பான வருகை, இருதரப்பை உறவை மீண்டும் உறுதி செய்வதோடு மேலும் வலுவடைய வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Night
Day