டெல்லி முதலமைச்சர் மீது தாக்குதல் - காங். கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய குஜராத்தை சேர்ந்த நபர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


டெல்லி முதலமைச்சர் இல்லத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும்போது ரேகா குப்தா மீது மர்ம நபர் திடீரென தாக்குதல் நடத்தினார். இதில் லேசான காயமடைந்த ரேகா குப்தா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எதிராக முதலமைச்சர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

Night
Day