சிஏஏ எதிரொலி - டெல்லி, உ.பி.யில் ராணுவம் குவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலானதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு டெல்லியில் அசம்பாவிதங்கள் ஏதும் அரங்கேறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் துணை ஆணையர் ஜாய் டிர்கி கூறியுள்ளார். இதே போல் CAA அமலாக்க அறிவிப்புக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பதற்றமான பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு டிஜிபி பிரசாந்த் குமார் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களைத் தூண்டும் வகையில் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக ஊடகங்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Night
Day