கேரளாவில் சிஏஏ அமலாகாது - முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் குடியுரிமை திருத்தச் சட்டமானது மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் இந்தச் சட்டம் எக்காலத்திலும் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

Night
Day