கெஜ்ரிவால், கவிதா காவல் நீட்டிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிஆர்எஸ் கட்சி தலைவர் கவிதா ஆகியோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா ஆகியோர் தற்போது திகார் சிறையில் உள்ளனர். இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day