குஜராத் : மருந்து தயாரிப்பு ஆலையில் திடீர் வெடி விபத்து : 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 

இகல்பரா பகுதியில் செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று தீப்பற்றக் கூடிய வாயு திடீரென கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 போ் உயிரிழந்தனா். ஆபத்தான நிலையில் உள்ள ஒருவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day