இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
இந்திய கடற்படைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 200-க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏவுகணைகளை வாங்குவதற்கான முறையான ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் முத்திரையிடப்படும் எனக் கூறியுள்ள கடற்படை அதிகாரிகள், கடற்படையின் ஒட்டுமொத்த போர் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போர்க்கப்பல்களில் இந்த ஏவுகணைகள் பெருமளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். பிரம்மோஸ் ஏவுகணையானது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
மதுரை கோரிப்பாளையம் தேவர் திருமகனார் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற புரட...