ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க பணிகளை நிறுத்த உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆரவல்லி மலைத் தொடர் வரையறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

டெல்லிக்கு அருகில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான புதிய வரையறையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் சட்டவிரோத மற்றும் முறைப்படுத்தாத சுரங்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும், ஆரவல்லி மலைத் தொடரின் சுற்றுச் சூழல் அமைப்பு பாதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் அந்த வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, முன்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய நிபுணர் குழுவை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Night
Day