இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், இந்திய குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், மாநிலங்களவையில் சுதா மூர்த்தியின் இருப்பு நமது பெண் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். சுதா மூர்த்தியின் நாடாளுமன்ற பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பளித்த 12 பேரை மாநிலங்களவை எம்.பியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...