இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாதிபதி கிரிஷ் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்கப்பா என்பவர் அளித்த புகாரில், 2014ம் ஆண்டு இந்திய அறிவியல் மையத்தின் வாரிய உறுப்பினராக கோபாலகிருஷ்ணன் இருந்த போது, போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அப்போது சாதிய ரீதியிலான அவதூறு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். 

இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாதிபதி கிரிஷ் கோபால கிருஷ்ணன், இந்திய அறிவியல் மைய முன்னாள் தலைவர் பலராம் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Night
Day