"பரிக்ஷா பே சர்ச்சா" - மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். 

பொதுத் தேர்வுகள் குறித்த மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக ஆண்டுதோறும் 'பரீக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார். அந்த வகையில், டெல்லி பாரத் மண்டபத்தில் 7வது 'பரீக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி வாழ்க்கையில் போட்டியும், சவாலும் இருக்க வேண்டும், ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

Night
Day