நாகை: சவுரிராஜ பெருமாள் ஆலயத்தில் தெப்ப உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள சவுரிராஜ பெருமாள் ஆலயத்தில் மாசி மகப்பெருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக  பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி நாச்சியார்களுடன் சவுரிராஜப்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day