தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற கைலாய காட்சி கொடுக்‍கும் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில், கோமதி அம்மன் - சங்கரலிங்க சுவாமி, 63 நாயன்மார்களுக்கு கைலாய காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியையொட்டி கோமதி அம்மனும் சங்கரலிங்க சுவாமியும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பஞ்ச வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க குடவரை மாதிரி திறந்தவுடன் சுவாமியும் அம்பாளும், 63 நாயன்மார்களுக்கு கைலாய காட்சி கொடுக்‍கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா' என்ற பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day