எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கொடுங்கையூர் பெண் ஐடி ஊழியர் நித்யாவை கொலை செய்ததாக மருத்துவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூரில் மென்பொருள் நிறுவனத்தில் திருச்சியை சேர்ந்த நித்யா என்ற இளம் பெண் பணியாற்றி வந்தார். இவர், பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார். திடீரென இவர் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். நித்யாவின் அறையில் இருந்த 25 சவரன் நகைகளையும் காணாததால் நகைக்காக கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. நித்யா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய நிலையில் இளம்பெண் நித்யாவுக்கு அதிக அளவு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்ததாக மருத்துவர் சந்தோஷ்குமார் மற்றும் அவரது ஆண் நண்பர் முஜுபூர் பாஷா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.