கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டிலுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த முதியவர் ஜான் சாண்டி என்பவருக்கு சொந்தமான நிலப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டில் அமல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிராந்தி குமார் பாட்டில் உள்ளிட்டோருக்கு எதிராக ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டில், மாவட்ட வருவாய் அதிகாரி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.  

Night
Day