விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் சச்சின் டெண்டுல்கர், பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனை சந்தித்து பேசினார். 8 வயதில் விபத்தில் இரு கைகளை இழந்த போதிலும் நம்பிக்கையுடன் கிரிக்கெட் விளையாடி வரும் அமீர் ஹூசைன் லோன், ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணி கேப்டனாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே பேட்டை வைத்துக்கொண்டு பேட்டிங் செய்த அமீர் ஹூசைனின் வீடியோவை கண்ட சச்சின், அவரை சந்திக்க வருவதாக கூறியிருந்தார். அதனை மறக்காமல் தற்போது அமீர் ஹூசைன் லோனை சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்தார். மேலும், அமீர் ஹுசைனிடம் உரையாற்றிய வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...