75-வது குடியரசு தினம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் தமது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‍கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா
வெளியிட்ட அறிக்‍கையில், இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் தமது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‍கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள், இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே, எழுதப்பட்ட இந்திய அரசியலைப்பு சட்டத்தை, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இயற்றி அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளினை போற்றிடும் வகையில் நாம்குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம் என்று சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நம் இந்திய தேசம் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்று இருந்தாலும், தனி உரிமைகள், கடமைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு இனி நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று அறிவித்த இந்த பெருமைக்குரிய நாளினை நாம் அனைவரும் குடியரசு தின விழாவாக கொண்டாடுகின்றோம் என்று புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்‍காட்டியுள்ளார்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணற்ற தியாகங்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும், நமக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், இந்த பூமியில் சிறந்த, வலிமையான மற்றும் சக்திவாய்ந்த தேசமாக நம் இந்திய தேசம் விளங்கிட, நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பினை அளித்திடுவோம் என்று சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

நம் தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் நாளாக கொண்டாடி வரும் குடியரசு தின நன்னாளில், நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும், அன்பும் அமைதியும் நிறைந்து வழியட்டும் என வாழ்த்தி, வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக பாதுகாப்பதே நமது இன்றியமையாத நோக்கம் என்பதை இந்த குடியரசு தின நாளில் உறுதி ஏற்போம் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day