2026-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளு கடை திறப்போம் - அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆளும் கட்சியை எதிர்த்து ஆண்ட கட்சிகள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் செய்வது வேடிக்கையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லுகடைகள் திறக்கப்படும் எனவும் பாஜகவினர் ஓட்டு கேட்டு மக்களை சந்திக்கும் போது, போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார். 

Night
Day