2026ல் சின்னம்மா தலைமையில் கழகம் வெல்லும் - வானூரில் தொண்டர்கள் சுவரொட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்ற வாசகங்களுடன் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 30 அடி நீளத்திற்கு கழக நிர்வாகிகள் பேனர் ஒட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சி அமைந்திட, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்போம் என குறிப்பிட்டு 30 அடி நீளத்திற்கு கழக நிர்வாகிகள் பேனர்களை ஒட்டியுள்ளனர். புரட்சித்தாய் சின்னம்மா தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வழி நடத்த வேண்டும் என்றும் பேனரில் கழக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர் ஆனந்தன், வானூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம், கழக நிர்வாகிகள் சுதாகர், தட்சணாமூர்த்தி, அன்பழகன், மயில்வேல், மோகன், சந்தோஷ், ராஜா, லட்சுமி காந்தன், கல்பனா ஆகியோர்களின் பெயர்களும் பேனரில் இடம் பெற்றுள்ளது.

Night
Day