விருதுநகர்: தண்ணீர் கலந்து டீசல் போடப்பட்டதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து டீசல் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வந்த தனியார் பள்ளி வேன் ஒன்றுக்கு ஊழியர்கள் டீசல் போட்டுள்ளனர். பின்னர் வேனை இயக்க முயன்றபோது வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் டீசலை பரிசோதித்து பார்த்தபோது அதிக அதிகளவு தண்ணீர் கலந்துள்ளது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற ஓட்டுநர்கள் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

varient
Night
Day