விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு தொகுதி காலியானால் அத்தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  ஆனால் தற்போது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக  நடைபெற உள்ள நிலையில், விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலையும் சேர்ந்து நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுடன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யுமென தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Night
Day