வடதமிழகத்தை நோக்கி 7 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், சென்னைக்கு 540 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கிலோ மீட்டர் துரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது. புயல் தற்போது சென்னைக்கு 540 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கிலோ மீட்டர் துரத்தில் நிலை கொண்டுள்ளது. இது 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. 

‘டிட்வா' புயலானது அடுத்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day