புயல் எச்சரிக்கை - 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை - மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளாக இன்றும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

 வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்காரணமாக தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், 5து நாளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.  

Night
Day