ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் சிறை பிடிப்பு - இலங்கை கடற்படை

எழுத்தின் அளவு: அ+ அ-

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களை கைது செய்தனர். அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து மன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Night
Day