மே மாதம் சம்பளம் வழங்கக் கோரி சென்னை பல்கலைக் கழக ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்கக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதி வேலை நாளன்று சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மே மாதத்திற்கான சம்பளம் தற்போது வரை வழங்கவில்லை என்றும் இதனால் வாழ்வாதாரம்  பாதிக்கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதேவேளையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஓய்வூதியத்தை விளம்பர திமுக அரசு முறையாக வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Night
Day