மேய்ச்சல் ஆட்டை காரில் திருடிச் சென்ற வழக்கறிஞர் உட்பட இருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆட்டை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். 

அம்பலால் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சலை என்பவர் ஆடுகளை வளர்த்துவரும் நிலையில், அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர் சுல்தான் என்பவரின் நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அதில் செம்மறி ஆடு ஒன்று காணாமல் போனதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வழக்கறிஞர் சுல்தான் தனது நண்பர் திருமலையுடன் சேர்ந்து காரில் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கறிஞர் சுல்தானையும் அவரது நண்பரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். இதனிடையே இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Night
Day