முதியோர் இல்லத்தில் உணவருந்தியவர்களுக்கு புட் பாய்சன்- 3 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் உணவருந்திய 3 பேர் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தென்காசியில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் வழக்கம் போல் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது உணவு ஒவ்வாமை காரணமாக 11 பேருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிர்வாகத்தினர் 11பேரை தென்காசி அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றனர். 11 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தனர். 8 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் செங்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ், முருகம்மாள் மற்றும் சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியோர் இல்லத்தில் சமைக்கப்பட்ட உணவில் ஒவ்வாமை ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததார்களா அல்லது வெளியில் இருந்து யாரேனும் வழங்கிய உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா என போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Night
Day