"அன்புமணியா" அல்லது "நானா" ஒருகை பார்த்துவிடுவோம் - பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்புமணியா ? நானா ? பார்த்து விடலாம் என்று சவால் விட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரை ​தானே கட்சி தலைவராக இருப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை அன்புமணி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இதுவரை 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நீக்‍கியுள்ளார். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராமதாஸ் - அன்புமணி இடையேயான பிரச்னை குறித்து பஞ்சாயத்து செய்வதற்காக தாம் தொடங்கிய 34 அமைப்புகள் வந்ததாக ராமதாஸ் குறிப்பிட்டார். அன்புமணியுடனான பிரச்னை குறித்த சமரச பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். 

அன்புமணியா, நானா பார்த்துவிடுவோம் என ஆவேசமாக கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னை கட்சியிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிவிடுமாறும், தைலாபுரத்தில் பேரன், பேத்திகளை பார்த்துக்கொண்டு இருக்குமாறு அன்புமணி கூறுவதாக சாடினார்.  

தனது விரல்களை கொண்டே தனது கண்களில் தானே குத்திக்கொண்டதாகவும், தன்னை நடைபிணம் ஆக்கிவிட்டு அன்புமணி தனது பெயரை கொண்டே நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ராமதாஸ் ஆதங்கத்துடன் தெரிவித்தார். உயிருடன் உள்ள தன்னை உதாசினப்படுத்திவிட்டு எனது புகைப்படத்தை கொண்டு உற்சவம் செல்கிறார்கள் என வேதனை தெரிவித்த ராமதாஸ், தந்தைக்கு மீறிய தனயன் இருக்க முடியுமா என்றும், குலசாமி என கூறிக்கொண்டு தனது நெஞ்சில் குத்துகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தார்.

Night
Day