தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மயிலாடுதுறை மாவட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தங்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் மற்றும் கோயில் சொத்துக்களாக உள்ளது. இவற்றை பொதுமக்கள் அடிமனை வரி செலுத்தி பல தலைமுறைகளாக குடியிருந்தும் விவசாயமும் செய்து வருகின்றனர். இதனிடையே தடையில்லா மின் இணைப்பு சான்று மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...