தமிழகம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.440 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 400 ...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வனத்துறையின் குளறுபடியால் 200 டன் நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள கூராங்குளம் கண்மாயின் நீர்பிடிப்பு பகுதி அருகிலுள்ள வடகரை கிராமத்திலும் உள்ளது. வனத்துறை ஏலம் விட்டதன் பேரில், கீழக்கோட்டை பகுதியில் உள்ள 200 டன் நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறி, கீழக்கோட்டை பஞ்சாயத்து தலைவரும், கூராக்குளம் கண்மாய் பாசனகமிட்டி தலைவரும் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். தங்களிடம் தீர்மானம் வாங்காமல், மரங்களுக்கு சம்பந்தமில்லாத வடகரையில் தீர்மானம் வாங்கி மரங்கள் வெட்டப்படுவதாக குற்றம் சாட்டிய கீழக்கோட்டை கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஆட்சியர் உத்தரவுபடியே நடந்து கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 400 ...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் ம?...