பெண்களை "ஓசி" என தரம் தாழ்த்தும் திமுக - பாஜக கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் எல்லோரும் ஓசியில தானே போய்ட்டு இருக்கீங்க என்று ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேசியது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மாவட்டம், மண்ணூத்து கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் தான் இப்பகுதியில் மழை பெய்கிறது என்றும், ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்றும் சுயதம்பட்டம் அடித்து கொண்டார். மேலும், மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் அனைவரும் அரசுப்  பேருந்தில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள் என கேலியாக பேசினார். அதோடு மட்டுமின்றி வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும், உங்கள் ஊருக்கு புதிய அரசுப் பேருந்து விடப் போகிறோம் - அதில் ஏறி ஓசியில் பயணம் செய்யுங்கள் என்று திமுக எம்எல்ஏ மகாராஜன் அநாகரீகமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை பேருந்தில் ஓசிப் பயணம் எனக்கூறி பெண்களை இழிவாக பேசிவரும் நிலையில் திமுக எம்எல்ஏ மகாராஜின் பேச்சு மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. தொடர்ந்து ஓசி, ஓசி என பெண்களை இழிவு செய்யும் திமுகவிற்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என பொதுமக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Night
Day