புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107ஆம் ஆண்டு பிறந்த தினம் : எம்.ஜி.ஆருக்கு, சின்னம்மா மரியாதை செலுத்துகிறார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, இன்று, புரட்சித்தலைவரின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தியாகராய நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய அதே வழியில், மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, புரட்சித் தலைவர் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Night
Day