புதுச்சேரியில் குடிநீருடன் கலந்து வந்த கழிவுநீர் - நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருதை கண்டித்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட சுதானா நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் குடிநீர் விநியோகிப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் வீரசெல்வத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Night
Day