பள்ளி துவங்கிய முதல் நாளில் அசம்பாவிதம் - சத்துணவு கூடத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பள்ளி துவங்கிய முதல் நாளே சத்துணவு கூடத்தில் உணவு சமைக்கும் போது கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. வடக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கிய முதல் நாளில் சமையல் காரர் தங்கம் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது கேஸ் கசிந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர்  விசாரணை மேற்கொண்டனர். 

Night
Day