குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் குடும்ப பிரச்சனையால் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வஞ்சிபாளையம் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர்கள் திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி, அவருடைய மகன் யாதேஸ்வரன் என்பது தெரியவந்தது. மேலும், குடும்பப் பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

Night
Day