பட்டாசு ஆலை வெடிவிபத்து - சின்னம்மா வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தது குறித்து, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான விளம்பர அரசு பொறுப்பேற்றது முதல், எல்லாவற்றிலும் அலட்சியப் போக்கைக் கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து, சுயநலப் போக்கோடு செயல்படுவதாலும், தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள் என்றும், புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். 

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகியதில் 6 பெண்கள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். 
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது கூடுதல் கவலையை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த 3 நபர்கள் புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை-எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது - திமுக தலைமையிலான அரசு இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது - பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் - மேலும் இந்த கோடைக் காலத்தில் மஞ்சள் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் என எச்சரிக்கை செய்யும் திமுக தலைமையிலான அரசு, இவ்வாறான வெப்ப அலை வீசும் காலங்களில், பட்டாசு ஆலைகளில் எந்தவிதமான பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என ஏதாவது அறிவுறுத்தி உள்ளதா? - தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இன்றைக்கு இந்த விபத்து ஏற்பட்டு இத்தனை உயிர்களை இழந்து இருக்க மாட்டோம் - திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும்  அலட்சியப் போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப் போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, கடும் பாதிப்படைந்து வருகிறார்கள் - எனவே திமுக தலைமையிலான அரசு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.  

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். விபத்து ஏற்பட்ட இடத்தில் கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும் - மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திமுக தலைமையிலான அரசு, உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை-எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என, திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day