நெல்லை: 2 மாதங்களுக்கு பின் மாஞ்சோலைக்கு செல்ல அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மாஞ்சோலைக்கு 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் மாஞ்சோலை செல்லும் சாலை கடும் சேதமானது. இதனால் மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் கால வரையறையின்றி தடை விதித்திருந்தனர். இந்நிலையில், தற்காலிக சாலை அமைத்து  பேருந்து சேவை தொடங்கப்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day