நீலகிரியில் 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்வதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரவு, பகலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவாலா, பந்தலூர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14 புள்ளி 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பாலகொலா பகுதியில் 13 புள்ளி 5 சென்டி மீட்டரும், அப்பர் பவானி 13 சென்டி மீட்டரும், குந்தா பகுதியில் 9 புள்ளி 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவத்துள்ளது. 

Night
Day