தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் அந்தரத்தில் நின்ற ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 30 பேர் : பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, அந்தரத்தில் சிக்கிய 30 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. அங்குள்ள டாப்கான் என்ற ராட்டினத்தில் 30 பேர் சென்றுள்ளனர். அப்போது ராட்டினத்தை இயக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உள்​ளிட்ட 30 பேரும் அந்தரத்தில் சிக்கி தவித்தனர். ராட்டினத்தில் சிக்கியவர்களை  பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினரால் மீட்க முடியவில்லை. இதையடுத்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள், ராட்டினத்தில் சிக்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் என 13 பேர் முதல் கட்டமாக பத்திரமாக மீட்டனர். பின்னர் மற்றவர்கள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பொழுதுபோக்‍கு பூங்காக்‍களில் உள்ள ராட்டினங்களில் முறையாக பராமரிப்பு  மேற்கொள்வதுடன் அதை கண்காணிக்க வேண்டியதும் அவசியம் என பொதுமக்‍கள் வலியுறுத்தினர்.

Night
Day