தமிழகம்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்காமல் இருந்த வட்டாட்சியரின் கவனத்தை ஈர்க்க, பொதுமக்கள் மலர் கொத்து கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெண்ணந்தூர் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் பல அருந்ததியர் சமூக குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். ஆனால், இது நாள் வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொறுமையிழந்த பொதுமக்கள், ராசிபுரம் வட்டாட்சியருக்கு மலர் கொத்து கொடுக்கச் சென்றனர். அங்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் துணை வட்டாட்சியரிடம் மலர் கொத்து கொடுத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...