நாடாளுமன்ற தேர்தலுக்‍கு தமிழகத்தில் 68,000 வாக்குசாவடிகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்‍களவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அந்த தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆகியோருக்கு ஏற்கனவே தேர்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு சாவடி அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் விரைவில் அளிக்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

Night
Day