நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகையன், வெண்ணிலா, தேவி ஆகியோருக்கு சொந்தமான மூன்று ஃபைபர் படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்கு சென்று இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து நாகை மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் 12 மீனவர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், 3 படகுகளின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவி, வலைகள் உள்ளிட்ட உடைமைகளையும் பறித்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day