கழகம் ஒன்றிணைய வேண்டும் - நாகையில் கழகத் தொண்டர்கள் சுவரொட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி முழுவதும் கழக நிர்வாகிகள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் வரவேற்பை பெற்றுள்ளன. 

ஒன்றுபட்ட வலிமைமிக்க அஇஅதிமுகதான் 2026 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி திமுகவை தோற்கடிக்க வழிவகை செய்யும் என்றும், கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்- மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதனை வரவேற்கும் வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி முழுவதும் கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 'தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்', '2026-ல் தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி மலரட்டும்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Night
Day