தொழுகையில் ஈடுபட்டவர்களை எட்டி உதைத்தது தவறு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர்களை காலால் எட்டி உதைத்தது மிகவும் தவறானது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். டெல்லி இந்தர்லோக் பகுதியில் உள்ள மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டதால், இஸ்லாமியர்கள் சிலர் மசூதிக்கு வெளியே, சாலையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காவலர் ஒருவர், தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்து கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன், தொழுகையில் ஈடுபட்டவர்களை எட்டி உதைத்தது மிகவும் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். 

Night
Day