தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருடைய நினைவு மண்டபம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏராளமானோர் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவில், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...