தென்காசி நர்சிங் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி நர்சிங் கல்லூரிக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த பவித்ரா, உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தென்காசியில் தனது கணவர் டிப்ளமோ நர்சிங் கல்லூரி வைத்து நடத்தி வருவதாகவும், மாணவி ஒருவரின் பொய்யான புகாரில் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டதாகவும்  தெரிவித்திருந்தார். இதனால் முறையான அறிவிப்பின்றி ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் கல்லூரிக்கு வைத்த சீலை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கல்லூரிக்கு சீல் வைக்க ஆட்சியருக்கு அதிகாரம் இல்லையெனக்கூறி, உடனடியாக சீலை அகற்ற உத்தரவிட்டார்.

varient
Night
Day